ஹொலிவுட் இளம் பாடகர் ஜஸ்டின் பீபர் அமெரிக்காவில் கார் விபத்து ஒன்றை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் இளம் பாப் பாடகர் ஜஸ்டின் பீபர். கனடாவைச் சேர்ந்து இவருக்கு இந்தியாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது உலக டூர் சென்று வரும் அவர் கடந்த மே மாதம் இந்தியாவுக்கு வருகை தந்து மும்பையில் மிக பிரமாண்டமாக இசை நிகழ்ச்சி நடத்தினர்.
இதைத் தொடர்ந்து இந்தோனேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஹாங் காங் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மேடையில் தோன்றி பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், இசை நிகழ்ச்சிக்கு சிறிய இடைவெளி விட்டு அமெரிக்கா சென்றுள்ளார் பீபர். இதையடுத்து கடந்த இரு நாட்களுக்கு முன் லாஸ் ஏஞ்சலிஸிலுள்ள பெவர்லி ஹில்ஸில் இருக்கும் சபன் தியேட்டரிலிருந்து வெளியே வந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
தனது பிளாக் டாட்ஜ் ராம் காரை எடுத்துக் கொண்டு செல்ல முற்பட்ட போது அங்கிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவரின் முட்டில் மோதியுள்ளது.
விபத்து ஏற்படுத்திய பின் வண்டியை வேறு எங்கும் செலுத்தாமல் அங்கேயே நின்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து விபத்தில் அடிபட்ட புகைப்படக் கலைஞரின் உதவியாளர், பொலிஸார் வரும் வரை அங்கேயே காத்திருந்தார் பீபர்.
இந்த விபத்து குறித்து பொலிசார் ஒருவர் கூறுகையில், இதில் அடிப்பட்ட புகைப்படக் கலைஞருக்கு பெரிய காயங்கள் எதுவும் இல்லை. அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்தார்.
ஏற்கனவே, பீபர் சர்ச்சையானவர் எனவும் ,கடந்த முறை சீனாவில் நடத்திய இசை நிகழ்ச்சியில் அவர் பல விரும்பத்தகாத காரியங்களில் செய்தார் எனவும் கூறி சீனாவில் அவர் இசை நிகழ்ச்சி நடத்த அந்நாடு அனுமதி மறுத்துள்ளது.
இதையடுத்து தற்போது புகைப்படக் கலைஞர் மீது விபத்து ஏற்படுத்திய செய்தி வெளியாகியுள்ளது.
காணொளி கீழே...
உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் இளம் பாப் பாடகர் ஜஸ்டின் பீபர். கனடாவைச் சேர்ந்து இவருக்கு இந்தியாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது உலக டூர் சென்று வரும் அவர் கடந்த மே மாதம் இந்தியாவுக்கு வருகை தந்து மும்பையில் மிக பிரமாண்டமாக இசை நிகழ்ச்சி நடத்தினர்.
இதைத் தொடர்ந்து இந்தோனேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஹாங் காங் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மேடையில் தோன்றி பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், இசை நிகழ்ச்சிக்கு சிறிய இடைவெளி விட்டு அமெரிக்கா சென்றுள்ளார் பீபர். இதையடுத்து கடந்த இரு நாட்களுக்கு முன் லாஸ் ஏஞ்சலிஸிலுள்ள பெவர்லி ஹில்ஸில் இருக்கும் சபன் தியேட்டரிலிருந்து வெளியே வந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
தனது பிளாக் டாட்ஜ் ராம் காரை எடுத்துக் கொண்டு செல்ல முற்பட்ட போது அங்கிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவரின் முட்டில் மோதியுள்ளது.
விபத்து ஏற்படுத்திய பின் வண்டியை வேறு எங்கும் செலுத்தாமல் அங்கேயே நின்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து விபத்தில் அடிபட்ட புகைப்படக் கலைஞரின் உதவியாளர், பொலிஸார் வரும் வரை அங்கேயே காத்திருந்தார் பீபர்.
இந்த விபத்து குறித்து பொலிசார் ஒருவர் கூறுகையில், இதில் அடிப்பட்ட புகைப்படக் கலைஞருக்கு பெரிய காயங்கள் எதுவும் இல்லை. அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்தார்.
ஏற்கனவே, பீபர் சர்ச்சையானவர் எனவும் ,கடந்த முறை சீனாவில் நடத்திய இசை நிகழ்ச்சியில் அவர் பல விரும்பத்தகாத காரியங்களில் செய்தார் எனவும் கூறி சீனாவில் அவர் இசை நிகழ்ச்சி நடத்த அந்நாடு அனுமதி மறுத்துள்ளது.
இதையடுத்து தற்போது புகைப்படக் கலைஞர் மீது விபத்து ஏற்படுத்திய செய்தி வெளியாகியுள்ளது.
காணொளி கீழே...