ஸ்பெயினில் இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் 54 பேர் காயம்

Friday, 28 July 2017 - 19:42

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+54+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
ஸ்பெயினில் உள்ள பாசிலோனா நகர் தொடரூந்து நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 54 பேர் காயமடைந்துள்ளனர்.
 
தொடரூந்து நிலையத்தினுள் நுழைந்த தொடரூந்தை நிறுத்துவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தொடரூந்து சாரதி உட்பட 19 பேர் கடும் காயங்களுக்கு உட்பட்டுள்ள போதிலும், அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவ தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
 
காயமடைந்தவர்களில் பிரான்ஸ் மற்றும் ரோமானியாவை சேர்ந்த மூவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஸ்பெயினில் உள்ள அவர்களது தூதுவராலயங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.