கிளிநொச்சியில் 8 வருடங்களாக சிறுமி துஷ்பிரயோகம்; மூவர் கைது

Friday, 18 August 2017 - 17:05

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+8+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3B+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர் நேற்று இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி வழங்கிய வாக்குமூலத்திற்கமையவே குறித்த நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

3 வயதிலிருந்து தான் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, 11 வயதான அந்த சிறுமி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக காவல்துறையினர் கூறினர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும், கிளிநாச்சி நீதவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டுள்ளனர்.

(செய்தியாளர் - நிபோஜன்)