இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு..

Saturday, 19 August 2017 - 11:09

%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
வவுனியா சமயபுரம் அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள வீட்டின் மாமரத்திலிருந்து இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் இன்று  காலை 7 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சமயபுரம் அம்மன் கோவிலுக்கு அருகில் வசித்து வரும் 26 வயதுடைய மாரிமுத்து பிரசாந்தன் என்ற குறித்த இளைஞன் இன்று காலை அவரது வீட்டிலுள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே கட்டார் நாட்டிலிருந்து விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

நேற்று இரவு வீட்டிற்கு வந்த இளைஞன் வழமையாக இருந்துள்ளார்.

எனினும் இன்று அதிகாலை அயலவர்கள் மாமரத்தில் இளைஞன் தூக்கில் தொங்கியுள்ளதனை அறிந்து காவற்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளனர்.





எமது பிராந்திய செய்தியாளர் ரூபன்