முதலாவது ஒருநாள் போட்டியின் பின்னர் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

Sunday, 20 August 2017 - 22:08

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நிறைவடைந்த பின்னர் , போட்டியை பார்வையிட வந்த ரசிகர்கள் சிலர் தற்போதைய நிலையில் மைதானத்திற்கு வௌியில் வீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தம்புள்ளை சர்வதேச விளையாட்டுத்திடலில் இன்று இடம்பெற்ற  இலங்கை மற்றும் சுற்றுலா இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

போட்டியின், நாயண சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாட பணித்தார்.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 43.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 216 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் , அதிகபட்ச ஓட்டங்களாக நிரோஷன் திக்வெல்ல 64 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் , அக்‌ஷர் படேல் மூன்று விக்கட்டுக்களையும் , பும்ரா , சஹால் மற்றும் ஜாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்கள் வீதம் பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு 217 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 28.5 ஓவர்களில் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்நிலையில் , போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து மைதானத்தை விட்டு வௌியேறிய ரசிகர்கள் சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இலங்கை அணி வீரர்கள், பாதுகாப்புக்கு மத்தியில் மைதானத்தில் இருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.