15 சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய காமூகர்கள்

Monday, 21 August 2017 - 9:58

15+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இந்தியா - உத்தரபிரதேசம் மாநிலத்தில் 15 வயது சிறுமி பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் கிராம தலைவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலியாவின் ரியோதி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு, 15 வயது சிறுமி வெளியே சென்று இருந்த போது பொலிஸ் மற்றும் கிராம தலைவர் அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

சிறுமியின் அழுகுரல் கேட்டு கிராம மக்கள் ஓடி சென்று அவரை காப்பாற்றி உள்ளனர்.

குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் தெரியவந்ததும் சிறுமியின் தந்தை அதிர்ச்சியில் உயிரிழந்துவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

கான்ஸ்டபிளை பொலிஸ் கைது செய்து விசாரித்து வருகிறது.

அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து பாலியல் வன் கொடுமை சம்பங்கள் நேரிட்டு வருகிறது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் பெண்களுக்கு எதிரான வன்முறையில் காட்சியில் மாற்றம் காணப்படவில்லை என விமர்சிக்கப்பட்டு வருகிறது.