24 வயதான இளைஞர் ஒருவரால் பாலியல் வன்புணர்வு உட்படுத்தப்பட்ட 19 வயது யுவதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சூட்சுமமான சாட்சி காரணமாக, குற்றம்சாட்டப்பட்டிருந்த இளைஞர் குற்றவாளியாகியுள்ளார்.
வெளிநாட்டு செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன.
இங்கிலாந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டு இந்த பாலியல் வன்புணர்வு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்கு இங்கிலாந்தில் மைடோவல் பிரதேசத்தில் உள்ள அடுக்கமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், குறித்த இளைஞர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தும் போது, தனது கையடக்க தொலைபேசியில் அந்த யுவதி குரல் பதிவு செய்துள்ளார்.
பின்னர் இது தொடர்பில் அந்த யுவதி, காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், சந்தேக நபரான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டை அந்த இளைஞர் மறுத்துள்ளார்.
இவ்வழக்கில் இருந்து தப்பவும் முயற்சித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொண்ட போது தான் பதிவு செய்த அந்த குரல் பதிவை நீதிமன்றத்தில் குறித்த யுவதி சமர்ப்பித்துள்ளார்.
இந்த சம்பவத்தை காவல்துறையிடம் கூறவேண்டாம் என குறித்த இளைஞன் யுவதியை மிரட்டும் விதம், அந்த குரல் பதிவில் பதிவாகியுள்ளது.
இந்த சாட்சிக்கமைய குறித்த இளைஞர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த நபர் மீது மேலும் பல பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன.
இங்கிலாந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டு இந்த பாலியல் வன்புணர்வு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்கு இங்கிலாந்தில் மைடோவல் பிரதேசத்தில் உள்ள அடுக்கமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், குறித்த இளைஞர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தும் போது, தனது கையடக்க தொலைபேசியில் அந்த யுவதி குரல் பதிவு செய்துள்ளார்.
பின்னர் இது தொடர்பில் அந்த யுவதி, காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், சந்தேக நபரான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டை அந்த இளைஞர் மறுத்துள்ளார்.
இவ்வழக்கில் இருந்து தப்பவும் முயற்சித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொண்ட போது தான் பதிவு செய்த அந்த குரல் பதிவை நீதிமன்றத்தில் குறித்த யுவதி சமர்ப்பித்துள்ளார்.
இந்த சம்பவத்தை காவல்துறையிடம் கூறவேண்டாம் என குறித்த இளைஞன் யுவதியை மிரட்டும் விதம், அந்த குரல் பதிவில் பதிவாகியுள்ளது.
இந்த சாட்சிக்கமைய குறித்த இளைஞர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த நபர் மீது மேலும் பல பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.