சில மாகாணங்களில் கடும் மழை

Wednesday, 23 August 2017 - 15:32

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றும், நாளையும் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 
வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் இன்று பிற்பகல் 2.00 மணியின் பின்னர் திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும்.

மழைப் பெய்யும் போது பிரதேசத்தில் தற்காலிகமாக கடுமையான காற்றும் வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.