விபசார விடுதியில் தாயும், மகனும் கைது

Wednesday, 20 September 2017 - 11:55

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
கேகாலை காவல்துறை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் விபசார விடுதியில் இருந்த தாயும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனை பிடியாணையை பெற்ற பின்னர் உளவாளி ஒருவரை பயன்படுத்தி காவல்துறை இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.

உளவாளி விபசார விடுதியில் நுழைந்த பின் கொடுத்த தகவலுக்கு அமைய காவற்துறையினர் அதிரடியாக உள்நுழைந்து அங்கிருந்த ஆண்கள் மற்றும் பெண்களையும் கைது செய்துள்ளனர்.

நேற்று காலை இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மீபிட்டிய பகுதியில் இந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை நடத்திச் சென்ற பெண்ணொருவர், விபசாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் மற்றும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபசார விடுதியை நடத்திச் சென்ற பெண், 54 வயதானவர் என்பதுடன், ஏனைய இரு பெண்களும் 50 மற்றும் 43 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் கம்பளை, மீபிட்டிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆகும்.

கைது செய்யப்பட்டுள்ள ஆண்கள் 18, 23, 28 வயதானவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நபர்களில் 23 வயதான இளைஞரின் தாயே, விபசார விடுதியை நடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் இன்று கேகாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.