கருக்கலைப்பிற்கு பின் ஆபத்தான நிலையில் மாணவி! பாடசாலையை மூடுவதற்கு நடவடிக்கை

Friday, 22 September 2017 - 11:00

%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%21+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
மூன்று மாதங்களாக இரண்டு ஆசிரியர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் மாணவி கருக்கலைப்பிற்கு பின் ஆபத்தான நிலையில் உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாடசாலையொன்றின் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

18 வயதான இந்த மாணவி தனியார் மருத்துவமனையொன்றில் கட்டாய கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.

கருக்கலைப்பு செய்துள்ள மருத்துவமனை தொடர்பில் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்திய காவல்துறை கூறியதற்கு அமைய, இந்த மாணவி கடந்த 3 மாதங்களாக இரண்டு ஆசிரியர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தற்போது அந்த மாணவி கருக்கலைப்பிற்கு பின்  சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இதுவரை அவரிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை.

குறித்த மாணவி வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார்.

பின்னர் மேற்கொண்ட பரிசோதனையில் அவர் கருவுற்றிருப்பது தெரியவந்துள்ளது.

பின்னர் அவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளதால் ஆபத்தான நிலையில் உள்ளார்.

இந்த சம்பத்தின் பின்னர் குறித்த பாடசாலைக்கு முன்னாள் கூடி மக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அந்த மாணவி கல்வி பயின்று வந்த பாடசாலையை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.