கிழக்கு லண்டன், ஸ்ரற்போட்டில் மேற்கொள்ளப்பட்ட அமில தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பை அடுத்து அமில தன்மை கொண்ட பொருள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் மூவர் சிகிச்சைக்கு பின்னர் வெளியேறியுள்ள அதே வேளை, மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் எவருக்கும் உயிராபத்தில்லை என மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்பு கொண்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.