தற்கொலை செய்துக் கொண்டதை கைப்பேசியில் பதிவு செய்த நடிகர் தசுன் ! (காணொளி)

Tuesday, 26 September 2017 - 7:32

%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
பிரபல சிங்கள நடிகர் தசுன் நிஷான் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட போது அவரது கைப்பேசியில் அனைத்தையும் பதிவு செய்திருந்த நிலையில் குறித்த கைப்பேசி காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பன்னிபிடியவில் அமைந்துள்ள வீட்டில் இருந்து நடிப்பு தொழிலில் ஈடுபட்ட வந்த தசுன் தனது அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

28 வயதடைய தசுன் ஹிரு தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் "நும்ப மகே கவுத " தொலைக்காட்சித் தொடரில் மற்றும் பல இசை காணொளிகளிலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்கொலை செய்துக்கொள்ளும் போது வீட்டில் யாரும் இருக்கவில்லை.

அதேபோல் , அவர் காதலித்து வந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் , இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட விதம் அவரது கைப்பேசியில் பதிவாகியிருந்த நிலையில் காவற்துறையால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காணொளியின் படி , தசுன் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளது தெரியவந்துள்ளது.

அவருடன் நடிக்கும் சக நடிகரொருவர் அவரை சந்திக்க தசுனின் வீட்டுக்கு வந்துள்ள போது வீட்டின் கதவு , ஜன்னல்கள் மூடப்பட்டிருந்துள்ளன.

பின்னர் , வீட்டின் பின்புறத்திற்கு சென்று ஜன்னலின் ஊடாக பார்த்த போது , அங்கு தசுனின் உடல் மின் விசிறியில் தொங்கிபடி இருந்ததை பார்த்ததாக குறித்த நபர் காவற்துறையில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் , தான் தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக அவர் கடிதமொன்றையும் எழுதி வைத்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

தனது தற்கொலைக்கு எவரும் காரணம் இல்லை என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மரண விசாரணைகளின் பின்னர் சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இதேவேளை , குறித்த தற்கொலைச் சம்பவம் காதல் தொடர்பு காரணமாக இடம்பெற்றுள்ளதா எனபது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிலியந்தலை காவற்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.