ஆன்மீகவாதி என்று கூறிக்கொண்டு கல்லூரி மாணவிக்கு இவர் செய்த கொடூரம்!! (காணொளி)

Tuesday, 26 September 2017 - 9:50

%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29+
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் ஆன்மீகவாதி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் தனது ஆசிரமத்துக்கு வந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பலாஹரி மஹாராஜ் என்ற ஆன்மீகவாதி ஆசிரமம் ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.

இந்த ஆசிரமத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருவது உண்டு.

இந்நிலையில் கடந்த ஓகஸ்ட் 7-ஆம் திகதி தனது ஆசிரமத்துக்கு வந்த பக்தர் ஒருவரின் மகளை இவர் தனியாக அழைத்துள்ளார்.

கல்லூரி ஒன்றில் படிக்கும் 21 வயதான அந்த மாணவியை தனியாக அழைத்த ஆன்மீகவாதி அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அந்த மாணவி குறித்த ஆன்மீகவாதி மீது காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் அந்த நபரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் ஆன்மீகவாதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இதனை விசாரித்த நீதிபதி ஆன்மீகவாதியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

மருத்துவ பரிசோதனையில் ஆன்மீகவாதி பலாஹரி மஹாரஜ் பலாத்காரம் செய்தார் என்பது உறுதிபடுத்தப்பட்டதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதேவேளை , கடந்த மாதத்தில் இரு பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தின் பேரில் ஆன்மீகவாதி குர்மீத் ராம் ரஹீம் சிக்கிற்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.