தொடரூந்தில் பயணித்த நபரொருவருடன் மேலும் நபர் ஏற்படுத்திய தகராறு அதிகரித்து ஒருவர் மற்றொருவரை தொடரூந்தில் இருந்து வெளியே தள்ளிவிட்டதால் அவர் உயிரிழந்துள்ளார்.
ராகம தொடரூந்து நிலையத்திற்கும், ஹோபே தொடரூந்து நிலையத்திற்கும் இடையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ராகம காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த நபர் இனங்காணப்படாத நிலையில், அவர் 40 முதல் 45 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்கலாம் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
சடலம் கொழும்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.
உயிரிழந்த நபருடன் தகராறில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
ராகம தொடரூந்து நிலையத்திற்கும், ஹோபே தொடரூந்து நிலையத்திற்கும் இடையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ராகம காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த நபர் இனங்காணப்படாத நிலையில், அவர் 40 முதல் 45 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்கலாம் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
சடலம் கொழும்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.
உயிரிழந்த நபருடன் தகராறில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.