இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
அபுதாபி மைதானத்தில் இன்றைய போட்டி பகல் இரவாக இடம்பெறும்.
5 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
அத்துடன் இலங்கை அணி இதுவரையில் தொடர்ந்து 9 ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது.
இந்தநிலையில் எதிர்வரும் 3 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இன்றைய போட்டியில் முகம் கொடுக்கிறது.
இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எவையும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது.
எனினும் இலங்கை அணியில் முக்கிய மாற்றங்ளுக்கு வாய்ப்பிருப்பதாக அணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக மிலிந்த சிறிவர்தனவிற்கு பதிலாக சாமர கப்புகெதர இணைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அத்துடன் சதீர சமரவிக்ரமவும் ஒருநாள் குழாமில் இணைக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா கிரிக்கட்டின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடது கைது துடுப்பாட்ட வீரரான இவர் மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கும் இலங்கை ஏ அணிக்கும் இடையில் இடம்பெறும் போட்டித் தொடரில் கலந்து கொண்டிருந்த நிலையில் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
இடது கைது துடுப்பாட்ட வீரரான இவர் மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கும் இலங்கை ஏ அணிக்கும் இடையில் இடம்பெறும் போட்டித் தொடரில் கலந்து கொண்டிருந்த நிலையில் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
போட்டி இடம்பெறும் அபுதாபி மைதானம் வழமைப் போலவே சுழற்பந்து வீச்சிக்கு சாதகமாக இருப்பதுடன், முதலில் துடுப்பாடும் அணிக்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் இன்றைய போட்டியில் நிரோஷன் தில்வெல்ல 87 ஓட்டங்களைப் பெறுவாராக இருந்தால், அவர் 1000 ஒருநாள் ஓட்டங்களை கடப்பார்.
26வது இன்னிங்ஸில் விளையாடவுள்ள நிரோசன் டிக்வல்ல இன்று 1000 ஓட்டங்களை கடக்கும் பட்சத்தில், இலங்கை சார்பில் அதிக வேகமாக 1000 ஓட்டங்களைக் கடந்தவர் என்ற சாதனையைப் பதிவு செய்தார்.
இதற்கு முன்னர் ரோய் டயஸ் 27 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைக் கடந்தமையே சாதனையாக இருக்கிறது.