இருள் அகன்று ஒளிபரவும் இத் தீபத் திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைவததாக ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
கொடுஞ்செயல்களால் மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய கொடிய அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
மறம் வீழ்ந்து, அறம் வென்ற நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகிடும் நன்னாளாகவும் தீபாவளி திருநாள் விளங்குகிறது.
இந்த தித்திக்கும் தீபாவளித் திருநாளில் மக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும் வளமும் பெருகி, இருள் அகன்று மகிழ்ச்சி ஒளிச்சுடர் பரவவேண்டுவதுடன்அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தனது உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் .
மேலும் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
கொடுஞ்செயல்களால் மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய கொடிய அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
மறம் வீழ்ந்து, அறம் வென்ற நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகிடும் நன்னாளாகவும் தீபாவளி திருநாள் விளங்குகிறது.
இந்த தித்திக்கும் தீபாவளித் திருநாளில் மக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும் வளமும் பெருகி, இருள் அகன்று மகிழ்ச்சி ஒளிச்சுடர் பரவவேண்டுவதுடன்அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தனது உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் .