இதுவரை 4 பேர் கைது...சம்பவத்தின் பின்னணியில் இன்னும் எத்தனை பேர்?

Wednesday, 18 October 2017 - 17:13

%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%3F
கொலன்னாவை சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் யக்கலை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

காணாமல் போன நிலையில் இன்று பிற்பகல் காவல் நிலையத்தில் சரணடைந்த 14 வயதுடைய ஸ்வேதா என்ற சிறுமியை தங்கவைத்திருந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்தே மேலும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சிறுமியை தங்கவைத்திருந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்து இன்று பிற்பகலும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காணாமல் போன நிலையில் வெல்லம்பிட்டி காவல் நிலையத்தில் சரணடைந்த வத்சலா பெரேரா மற்றும் அவரது கணவரின் சகோதரியின் 19 வயதுடைய காதலன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14 ஆம் திகதி கொலன்னாவையில் வைத்து ஆடை கொள்வனவு செய்வதற்காக சென்ற நிலையில் ஒரு பிள்ளையின் தாயான வத்சலா பெரேராவும், அவரின் கணவரின் சகோதரியான 15 வயது சிறுமி மற்றும் 14 வயதுடைய ஸ்வேதா என்ற சிறுமியும் காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் காவல்துறை தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று முற்பகல் வத்சலா மற்றும் 15 வயது யுவதி வெல்லம்பிட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

அத்துடன் இன்று பிற்பகல் 14 வயதுடைய ஸவேதா கம்பஹா காவல் நிலையத்தில் சரணடைந்தமையை தொடர்ந்து இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது