இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் அபுதாபில் தற்போது இடம்பெற்றுவரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 209 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக அணித்தலைவர் உபுல் தரங்க 61 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
திரிமான்ன 28 ஓட்டங்களையும் , திசர பெரேரா 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் ஹசான் ஹலி 34 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்று பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் இலங்கை அணி தோல்வியடையும் பட்சத்தில் தொடரை இழக்கக்கூடும் என்பது குறிப்பிடத்க்கது.
இன்னும் சற்று நேரத்தில் பாகிஸ்தான் அணி 209 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக அணித்தலைவர் உபுல் தரங்க 61 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
திரிமான்ன 28 ஓட்டங்களையும் , திசர பெரேரா 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் ஹசான் ஹலி 34 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்று பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் இலங்கை அணி தோல்வியடையும் பட்சத்தில் தொடரை இழக்கக்கூடும் என்பது குறிப்பிடத்க்கது.
இன்னும் சற்று நேரத்தில் பாகிஸ்தான் அணி 209 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.