பெண் அதிபர் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலை

Thursday, 19 October 2017 - 10:42

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88
மல்வானை பகுதியில் பெண் அதிபர் ஒருவர் கழுத்தை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் அதிகாலை 2 மணியளவில் குளியறைக்கு சென்ற குறித்த பெண் அதிபர் கத்தியால் கழுத்தை வெட்டிக்கொண்டு பாரிய சத்தத்துடன் அழுதுள்ளார்.

இந்நிலையில் சத்தத்தினை செவியுற்ற கணவர் சென்று பார்வையிடும் பொழுதும் பாரிய கத்தியால் கழுத்தினை வெட்டிக்கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் அவரை தடுத்த கணவரும் மகனும் இணைந்து, பியகம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மல்வானை - தொம்பே - கிம்புல்விலவத்தை மகா வித்தியாலயத்தில் உதவி அதிபராக சேவையாற்றும் 54 வயதுடைய லலனி மந்ரிரத்ன என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.