பிரித்தானியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் இணக்கத்திற்கு வந்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான உச்சி மாநாட்டில் 27 நாடுகளின் பிரதிநிதிகள் இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நிலைப்பாட்டை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வரவேற்றுள்ளார்.
எப்படியிருப்பினும், எதிர்வரும் டிசம்பர் மாதமளவிலேயே இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்கான ஏதுநிலை தோன்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு குறித்து உறுதியான நிலைப்பாட்டை மே கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பொருளாதாரத்திற்கு அமையவே அவர் செயல்படுவதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.