ஆசிய கிண்ண ஹொக்கி போட்டியின் இறுதி போட்டிக்கான தேர்வு போட்டி ஒன்றில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
8 அணிகள் பங்கு கொள்ளும் 10வது ஆசிய கிண்ண ஹொக்கி போட்டிகள் பங்களாதேஸில் நடைப்பெறுகிறது.
இதில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், 'பி' பிரிவில் முதல் 2 இடத்தை தக்கவைத்த மலேசியா, தென்கொரியா ஆகிய 4 அணிகள் 2வது சுற்றுக்கு முன்னேறின.
2வது சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்தநிலையில், இன்று மாலை இடம்பெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.