வாய்த் தர்க்கம் கத்திக்குத்தாக மாறியதில் இருவர் வைத்தியசாலையில்

Monday, 23 October 2017 - 13:11

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
மட்டக்களப்பு- காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி நகரில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்ததால் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு நடந்த இச்சம்பவத்தில் 25 வயதான இளைஞர் ஒருவரே கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

இதனால் பாரதூரமான காயங்களுக்கு உள்ளான அவர், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டார்.

தனது கணவன் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த அவரது மனைவியும், அதிர்ச்சியில் மயங்கி விழுந்து நினைவிழந்த நிலையில் உடனடியாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம்பற்றி காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.