திவுலபிட்டிய ஹென்பிடகெதர பிரதேசத்தில் பாதாள குழுவொன்றுக்கும் STF அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சந்தேகநபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது , மேலும் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
ஆயுதக் குழுவொன்று தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய காவற்துறை அதிரடிப்பிரிவினர் குறித்த இடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது , சந்தேகநபர்களில் ஒருவர் காவற்துறை அதிரடிப்பிரிவினரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் , STF அதிகாரிகளுக்கும் பதிலுக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது , ஒரு சந்தேகநபர் காயமடைந்துள்ள நிலையில் , திவுலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அவ்விடத்தில் இருந்த வேன் ரக வாகனமொன்றை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் , 7 சந்தேகநபர்களை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் , சந்தேகநபர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகளும் , பிலாஸ்டிக் துப்பாக்கியொன்றும் மற்றும் கைக்குண்டு ஒன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
இதன்போது , மேலும் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
ஆயுதக் குழுவொன்று தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய காவற்துறை அதிரடிப்பிரிவினர் குறித்த இடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது , சந்தேகநபர்களில் ஒருவர் காவற்துறை அதிரடிப்பிரிவினரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் , STF அதிகாரிகளுக்கும் பதிலுக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது , ஒரு சந்தேகநபர் காயமடைந்துள்ள நிலையில் , திவுலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அவ்விடத்தில் இருந்த வேன் ரக வாகனமொன்றை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் , 7 சந்தேகநபர்களை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் , சந்தேகநபர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகளும் , பிலாஸ்டிக் துப்பாக்கியொன்றும் மற்றும் கைக்குண்டு ஒன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.