சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி - 7 பேர் கைது!

Monday, 23 October 2017 - 14:51

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+-+7+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
திவுலபிட்டிய ஹென்பிடகெதர பிரதேசத்தில் பாதாள குழுவொன்றுக்கும்  STF அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சந்தேகநபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது , மேலும் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

ஆயுதக் குழுவொன்று தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய காவற்துறை அதிரடிப்பிரிவினர் குறித்த இடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது , சந்தேகநபர்களில் ஒருவர் காவற்துறை அதிரடிப்பிரிவினரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் ,  STF அதிகாரிகளுக்கும் பதிலுக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது , ஒரு சந்தேகநபர் காயமடைந்துள்ள நிலையில் , திவுலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அவ்விடத்தில் இருந்த வேன் ரக வாகனமொன்றை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் , 7 சந்தேகநபர்களை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் , சந்தேகநபர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகளும் , பிலாஸ்டிக் துப்பாக்கியொன்றும் மற்றும் கைக்குண்டு ஒன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.