தம்பியின் செயலால் அதிர்ச்சியடைந்த அண்ணன் சூர்யா..! இருவருக்கும் மோதலா...!!

Friday, 17 November 2017 - 10:37

%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE..%21+++%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE...%21%21+
தீரன் அதிகாரம் ஒன்று என் படத்தில் நடித்து வரும் நடிகர் சிவக்குமாரின் இரண்டாவது புதல்வரும் நடிகருமான கார்த்தி அளித்துள்ள செவ்வி ஒன்றில் தனது அண்ணாவான சூர்யாவை மறைமுகமாக குத்திக்காட்டும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திரைப்படம் குறித்து இந்திய நிரூபர்கள் கார்த்தியிடம் வினவியுள்ளனர்.

அதற்கு அவரும் அச்சமின்றி தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

குறிப்பாக அந்த படத்தில் நான் வழமைக்கு மாறாக நடித்துள்ளேன்.

போலிஸ் கதாபாத்திரங்கள் இதுவரை தமிழ் சினிமாவை பல வடிவங்களில் அலங்கரித்துள்ளன.

நானும் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் போலிஸ் வேடமேற்றே நடித்துள்ளேன்.

ஆனால் தமிழ் சினிமாவில் இதுவரை போலிஸ் அதிகாரியாக இவ்வாறு நடித்திருக்கமாட்டார்கள்.

உதாரணத்திற்கு சத்தமிட்டு கதைப்பதை நான் தவிர்த்துக்கொண்டுள்ளேன்.

மூளையை பயன்படுத்தி சொந்த முயற்சியால் மௌனமாக படத்தின் ஒவ்வொரு கட்டத்தினையும் நகர்த்த முயற்சித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிங்கம் திரைப்படத்தின் மூன்று பாகங்களிலும் சூர்யா சத்தமிட்டு வசனம் கதைப்பதும், அறைக்கூவல் விடுவதும், சக போலீசாரை கடும் தொனியால் அச்சுறுத்துவதும் என சத்தமிட்டு நடித்துள்ளார்.

ஆகையினால் காரத்தி தனது அண்ணாவான சூர்யாவையா சுட்டிக்காட்டியுள்ளார் என இரசிகர்கள் மத்தியில் சந்தேகம் நிலவியுள்ளது.