இன்றும் போட்டி இடைநிறுத்தம

Friday, 17 November 2017 - 15:46

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE
சீரற்ற காலநிலையால் சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த போட்டி நடைபெறும் ஈடன்காடன் மைதானத்தின் ஆடுகளம் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டியின் முதல் நாள் ஆட்டமும் நேற்று மழை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே இடைநிறுத்தப்பட்டது.

எனவே இன்றைய போட்டி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் இன்றும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய போட்டி இடைநிறுத்தப்படும் போது தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் இந்திய அணி, 5 விக்கட்டுக்களை இழந்து, 74 ஓட்டங்களை பெற்றிருந்தது.