தமது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சர் எஸ். சர்வேஸ்வரன் விளக்கமளிக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பாடசாலை விழா ஒன்றில், கலந்து கொண்ட வடமாகாண கல்வி அமைச்சர் எஸ். சர்வேஸ்வரன் அங்கு தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அது குறித்த வெளியான காணோளி பரிசீளிக்கப்பட்டது.
இதன்போது, அவர் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
அங்கிருந்த மற்றொரு அதிகாரியை தேசிய கொடியை ஏற்றுமாறு பணித்துள்ளார்.
ஒரே இலங்கை தொடர்பான எண்ணக்கருவை, அதேபோல் நாட்டின் இறைமை மற்றும் சுயாதீனத்தன்மை முதலானவற்றை சவாலுக்கு உட்படுத்தும் மனநிலையுடன் இருக்கும் ஒருவர் என்பதுதான் இதனூடாக வெளிப்பட்டுள்ளது.
அவர் உண்மையாக கல்வித் துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றுக்கொண்டவரானால் அவரது நிலைப்பாடு தொடர்பில் நாட்டுக்கு விளக்கமளிக்க அவருக்கு தாம் அழைப்பு விடுப்பதாக அமைச்சர் எஸ் பி திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.