யாழ் . வாள்வெட்டு சம்பவம் - மேலும் 11 பேர் கைது!

Sunday, 19 November 2017 - 8:08

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D+.+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+11+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
யாழ்ப்பாணத்தில் அண்மைய சில நாட்களாக இடம்பெற்றுவந்த வாள் வெட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தில் மேலும் பதினொரு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசாரின் சோதனை நடவடிக்கைகளில் மேற்படி பதினொரு சந்தேகத்திற்குரியவர்கள் நேற்றிரவு யாழ்ப்பாணம் நகரில் வைத்து சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாள் வெட்டுக்கள் இடம்பெற்ற இடங்களை வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்ததுடன் காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கண்கானித்துள்ளார்.

வாள்வெட்டு சம்பவங்களில் காயமடைந்தவர்களை பிரதி காவல்துறைமா அதிபர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை இனம் கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதிக் காவல்துறைமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.