முச்சக்கரவண்டியில் சென்றவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

Sunday, 19 November 2017 - 10:43

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+
கொழும்பு - புஞ்சி பொரளை பிரதேசத்தில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

புஞ்சி பொரளை - பீ டபிள்யூ . ப்ரணாந்து மாவத்தையில் இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த நபரொருவர் மீது இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.