காணாமல் போன ஆர்ஜன்டீனாவின் நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணிகளில் ரஷ்யாவும் இணைந்துக் கொண்டுள்ளது.
44 பணியாளர்களுடன் கடந்த வாரம் இந்த கப்பல் காணாமல் போனது.
இதில் இருந்து சில தடவைகள் சமிக்ஞைகள் கிடைக்கப்பெற்றிருந்தாலும், அவற்றைக் கொண்டு குறித்தக் கப்பல் இருக்கும் இடத்தை அடையாளப்படுத்த முடியவில்லை.
தற்போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த கப்பலை தேடும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்மூழ்கி கப்பல் காணாமல் போய் ஒரு வார காலம் ஆகியுள்ள நிலையில், அதன் பிராணவாயு அளவு குறித்து தற்போது கவலை வெளியிடப்படுகிறது.