வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களால் அனுப்பப்படுகின்ற பணத்திற்கு 1 சதவீத வரி விதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தாம் கடுமையான நடைமுறைகளை பின்பற்றவுள்ளதாக குடியியல் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
30 லட்சம் பேர் வரையில் வெளிநாடுகளில் பணிபுரியும் நிலையில், அவர்களால் வருடாந்தம் ஒரு ட்ரில்லியனுக்கும் அதிகமான பணம் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவதாகவும், அவர்களின் நலன் குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத அரசாங்கம் அவர்களிடமிருந்து வரி அறவிட முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.