ஆப்கானிஸ்தான் கஜினி மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு தரப்பினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் மரணித்தனர்.
கஜினி மாகாணம் காராபாக்கிலுள்ள சோதனைச் சாவடி மீது தலீபான் தீவிரவாதிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இடம்பெற்ற மோதலில் 8 தீவிரவாதிகளும் 3 பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நங்கர்ஹார் மாகாணமத்தில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கத்தை ஒழித்து 16 ஆண்டுகள் ஆகியுள்ளபோதும் அங்கு தொடர்ச்சியாக தலீபான்கள் தாக்குதல்களை நடத்திவருகின்றனமை குறிப்பிடத்தக்கது.