இந்தியாவின் பீகார் மொகாமா நகரை சேர்ந்தவர் சந்தீப் குமார். பீகாரை சேர்ந்த 16 வயதான பாடசாலை மாணவிக்கு பல முறை Missed Call செய்துள்ளார்.
பின்னர் இவர்களது நட்பானது தொடர்ந்துள்ளது. சந்தீப் இதனை சாதகமாக பயன்படுத்தி தன்னை திருமணம் செய்யுமாறு கூறியுள்ளார்.
மேலும் தனக்கு 20 வயது ஆகிறது என்றும் அழகாக இருப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் பயது போன மாணவி சந்தீப்பை சந்திக்க தொடரூந்து நிலையம் சென்று அவரை நேரில் பார்த்த போது அதிர்ச்சி யடைந்தார்.
சந்தீபை பார்த்த போது தனது அப்பா வயது உடைய உங்களை திருமண செய்து கொள்ள முடியாது என அந்த மாணவி கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த சந்தீப் அந்த மாணவியை வற்புறுத்தி தொடரூந்தில் ஏற்றியுள்ளார். இதனையடுத்து கழிவறைக்கு சென்ற மாணவி தன் சகோதரியை கைப்பேசியில் அழைத்து உதவி கேட்டுள்ளார.
அதன் பின்னர் , தொடரூந்து bhagalpur நிலையத்தினை அடைந்த போது அங்கு காத்திருந்த காவற்துறையினர் சந்தீப்பை கைது செய்துள்ளனர்.