ஸ்கூட்டர் வெடித்து சிதறியதில் ஐவர் பலி

Wednesday, 13 December 2017 - 11:20

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
சீனாவின் பீஜிங் நகரில் வீடு ஒன்றிற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார உந்துருளி ஒன்று வெடித்ததில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் பீஜிங் நகரிலுள்ள பைகியாசிங் நகரில் குடும்பத் தலைவர் மின்சார உந்துருளி ஒன்றின் மூலம் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வருகை தந்த அவர்,

வீட்டின் முன்சாலையில் உந்துருளியினை நிறுத்தி வைத்துவிட்டு நித்திரைக்கு சென்றுள்ளனர்.

இதன்போது உந்துருளியில் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாக உந்துருளி வெடித்து சிதறியுள்ளது.

இதனை தொடர்ந்து வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ஐவர் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், தீயணைப்பு பிரிவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.