பியரால் நாவலபிட்டி யுவதிக்கு நேர்ந்த கதி..! பல தடவைகள் நடத்துள்ள கொடூரம்!!

Thursday, 14 December 2017 - 13:36

+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF..%21+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21%21
நாவலபிட்டியில் காதலிக்கு பியர் மதுபானம் கொடுத்து பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கட்படுள்ளது.

பொருட்கள் வாங்குவதற்காக குறித்த யுவதி நகரத்திற்கு சென்றுள்ளார்.

மாலையாகியும் யுவதி வீடு திரும்பாமையினால் பெற்றோர் யுவதி காதலனின் வீட்டில் தங்கியிருக்க கூடும் என்ற சந்தேகத்தில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது யுவதியை வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர் நடந்தவற்றை கேட்டறிந்துள்ளனர்.

தன்னை ஒரு நாள் விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்று பியர் பானம் வழங்கினார்

வழங்கிய பின்னர் அதனை காணொளியாக பதிவு செய்து வைத்துகொண்டார்.

பதிவு செய்யப்பட்ட காணொளியினை வதன புத்தகம், காணொளி காட்டி (யுடியூப்), இணைய குறுந்தகவல் பறிமாற்றி (டுவிட்டர்) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதாக அச்சுறுத்தி தன்னுடன் கணவன் மனைவியாக வாழ கோரிக்கை விடுத்தார்.

அச்சுறுத்தியதால் தானும் இணக்கப்பட்டு அவருடன் பல தடவைகள் அவ்வாறு சென்றுள்ளேன்.

அதனையும் அவர் தனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த காணொளிகள் அனைத்தினையும் இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்போவதாகவும், தன்னுடன் ஒரிரவு தங்கியிருந்தால் அதனை அழித்து விடுவதாகவும் தெரவித்துள்ளார்.

இதனாலேயே தாம் அவருடன் சென்றேன் என யுவதி தெரிவித்தமையை தொடர்ந்து பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டினை தொடர்ந்தே காவல் துறையினர் குறித்த 28 வயுதுடைய இளைஞரை கைது செய்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.