இந்தமுறை பாதீட்டில் பியருக்கான விலை குறைக்கப்பட்டதன் காரணமாக வடக்கில் பனங்கள் விற்பனை சடுதியாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கின் கள் உற்பத்தியாளர்களின் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பனங் கள் உற்பத்தி செய்யும் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து 800 குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பியர் விலை குறைக்கப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் கள் விற்பனை 85 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக அவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.