விசுவமடு அதிஸய வினாயகர் கோயில் வீதி பகுதியில் புதையல் தோண்டிய 3 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு காவற்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.