நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு பலர் முயற்சி

Sunday, 17 December 2017 - 19:04

+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+
நாட்டை மீண்டும் பிளவுபடுத்துவதற்காகவும், நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்காகவும் பலர் முயற்சித்து வருவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
 
நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
 
நாடு முன்னோக்கி பயணிக்க வேண்டுமானால் அதற்கு ஒரு நோக்கம் மற்றும் இலக்கு என்பவற்றுடன், நாட்டு பற்றும் அவசியம்.
 
ஆசியாவில் 70 வருட ஜனநாயக அரசியலை கொண்ட நாடாக இலங்கை காணப்பட்டாலும், இந்த 70 வருட வரலாற்றில் இரண்டு அரசியல் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை தோல்வி கண்டிருந்தன.
 
அதற்கும் மேல் நாட்டில் பயங்கரவாதம் ஏற்பட்டதுடன், அவற்றினால் நாடு பின்னடைவை சந்தித்தது.
 
சுதந்திரம் பெற்ற காலப்பகுதியில் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை விட இலங்கை பொருளாதாரத்தில் முன்னிலையிலேயே இருந்தது.
 
அவ்வாறு முன்னேற்றம் கண்ட இலங்கை தற்போது பின்னடைந்துள்ளது எனவும் கரு ஜயசூரிய தெரிவித்தார்.