உள்நாட்டுப் போர் காரணமாக சிரியாவில் இருந்து லெபனானுக்கு தப்பிச் செல்ல முற்பட்டவர்களில் 10 பேர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்களும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் லெபனான் ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.
சிரியாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக, பொது மக்கள் அண்மித்த நாடுகளுக்கு ஏதிலிகளாக இடம்பெயர்ந்து வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.