தீர்மானமிக்க போட்டியில் சிம்பாவ்வேக்கு முதல் வெற்றி

Sunday, 21 January 2018 - 11:41

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+
பங்களாதேஷில் இடம்பெறும் முக்கோண ஒருநாள் தொடரின் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4ஆவது போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது.

மிர்பூரில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த முக்கோணத் தொடரில், ஒரு அணி, நான்கு போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

இதில், தாம் எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.

பங்களாதேஷ் அணி, இரண்டு போட்டிகளில் பங்கேற்று, இரண்டிலும் வெற்றிபெற்றுள்ளது.

இரண்டு போட்டிகளில் பங்கேற்ற சிம்பாப்வே அணி, ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.

எந்தவொரு போட்டியிரும் வெற்றிபெறாத நிலையில் உள்ள இலங்கை அணிக்கும், எஞ்சியுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளும் முக்கியத்துவமிக்கதாக அமையவுள்ளது.

இந்த நிலையில், சிம்பாப்வே அணியை இலங்கை அணி இன்று மீண்டும் எதிர்கொள்ள உள்ளது.