இலங்கையின் தகமை முறைமை சந்தை, ஏனைய பிராந்திய நாடுகள் போல மெதுவான நிலையில் கடந்த வருடம் செயல்பட்ட போதிலும் இந்த வருடத்தில் பங்கு மாற்றங்கள் சிறந்த முறையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பங்கு சந்தையின் வலுத்தன்மை சிறப்பாக செயல்படுவதற்கான ஏதுநிலை ஏற்பட்டுள்ளதாக பங்கு தரகர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பங்கு சந்தை தரகு நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் பங்கு வர்த்தகம் பெறும்பான்மையான பிராந்திய நாடுகளுடன் ஒத்த தன்மையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக தென்கொரியா, சிங்கப்பூர், ஹொங்கொங், மலேசியா, ஜப்பான், சீனா, தாய்லாந்து, வியட்நம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை ஒத்ததாகவே இலங்கை வர்த்தகம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை பங்கு சந்தையின் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு படிப்படியாக மேம்பட்டு வந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் வெளிநாட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கு சந்தையில் ஆர்வம் காட்டியதனாலேயே என கருதப்படுகிறது.
இருப்பினும் அதற்கு முந்திய 2 ஆண்டுகளில் பங்கு சந்தை பரிவர்தனை நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவில் செயல்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் பங்கு சந்தையின் வலுத்தன்மை சிறப்பாக செயல்படுவதற்கான ஏதுநிலை ஏற்பட்டுள்ளதாக பங்கு தரகர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பங்கு சந்தை தரகு நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் பங்கு வர்த்தகம் பெறும்பான்மையான பிராந்திய நாடுகளுடன் ஒத்த தன்மையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக தென்கொரியா, சிங்கப்பூர், ஹொங்கொங், மலேசியா, ஜப்பான், சீனா, தாய்லாந்து, வியட்நம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை ஒத்ததாகவே இலங்கை வர்த்தகம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை பங்கு சந்தையின் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு படிப்படியாக மேம்பட்டு வந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் வெளிநாட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கு சந்தையில் ஆர்வம் காட்டியதனாலேயே என கருதப்படுகிறது.
இருப்பினும் அதற்கு முந்திய 2 ஆண்டுகளில் பங்கு சந்தை பரிவர்தனை நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவில் செயல்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.