அனுராதபுரத்தை உலுக்கியுள்ள தொடரூந்து விபத்து (படங்கள் இணைப்பு)

Monday, 22 January 2018 - 12:32

+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29
அனுராதபுரம் - புதிய நகர தொடரூந்து நிலையத்திற்கு அருகில், கொழும்பில் இருந்து வருகை தந்த தொடரூந்தில் மோதி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

22 வயதுடைய மிஹிந்தலை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பயணித்துக்கொண்டிருந்த தொடரூந்தில் திடீரென இளைஞர் மோதி தூக்கி எறியப்பட்டதாக தொடரூந்து இயந்திர சாரதி தெரிவித்தார்.

குறித்த இளைஞர் தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது விபத்துக்குள்ளானாரா என்பது தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 20ம் திகதி பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.