முக்கோண தொடரில் இருந்து குசல் ஜனித் பெரேரா நீக்கம்

Monday, 22 January 2018 - 19:58

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+
பங்களாதேஸில் இடம்பெற்றுவரும் முக்கோண தொடரில் இருந்து இலங்கை அணி வீரர்  குசல் ஜனித் பெரேரா நீக்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக அவர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.

அவருக்கு பதிலாக தனஞ்சயடி சில்வா அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ், பங்களாதேஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா கிரிக்கட் இதனைத் தெரிவித்துள்ளது.

காயம் காரணமாக அவர் பங்களாதேஸ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு எதிரான முக்கோண ஒருநாள் தொடரில் இருந்து விலகினார்.

தற்போது அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்தநிலையில் அவருக்கு ஓய்வு வழங்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள நிலையில், எதிர்வரும் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஸுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி இந்த மாதம் 31ம் திகதி ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.