சிவனொளிபாத மலை யாத்திரை சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த பயங்கரம்

Monday, 19 February 2018 - 10:37

+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
அனுராதபுரம் - பதவிய - பாடசாலையொன்றிற்கு அருகில் வேன் ரக வாகனமொன்று மின்சார கம்பத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்று மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த வெலிஓய பிரதேசத்தை சேர்ந்த சிலரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பதவிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , அதில் கவலைக்கிடமான நிலையில் உள்ள 6 பேர் அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பிக்கு ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.