ஒரு அடார் லவ் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் தங்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக படத்தின் இயக்குனர், நடிகை பிரியா வாரியர் மீது மராட்டிய காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் இடம் பெற்ற ஒரே பாடல் மூலம் உலக புகழ் பெற்றவர் இளம் நடிகை பிரியா வாரியர்.
அந்த பாடல் காட்சியில் இடம் பெற்ற பிரியா வாரியரின் கண் அசைவுகள், முக பாவனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பட ரிலீசை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.
இதனால் நாளுக்கு நாள் பிரியா வாரியரின் புகழ் உயர்ந்து கொண்டே செல்கிறது.
அதே சமயம் இந்த பாடல் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த பாடலில் இடம் பெற்றுள்ள ஒரு வரி மத உணர்வை புண்படுத்துவதாக உள்ளதாக ஐதராபாத் காவல்நிலையத்தில் அந்த படத்தின் இயக்குனர் உமர் லுலு மற்றும் நடிகை பிரியாவாரியர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி காவற்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த பாடலுக்கு மராட்டிய மாநிலத்திலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அங்குள்ள ஜின்சி காவல்நிலையத்தில் இது தொடர்பாக சிலர் முறைப்பாடு செய்துள்ளனர். அந்த முறைப்பாட்டில் ஒரு அடார் லவ் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் தங்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளதாகவும் எனவே அந்த படத்தின் இயக்குனர் உமர் லுலு மற்றும் பாடல் காட்சியில் நடித்த நடிகை பிரியா வாரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த முறைப்பாட்டில் கூறி உள்ளனர்.
இதுபற்றி அவர்கள் இருவர் மீதும் ஜின்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் , பிரியா வாரியருக்கு எதிராக தொடர்ந்து முறைப்பாடுகள் அளிக்கப்படுவதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் இடம் பெற்ற ஒரே பாடல் மூலம் உலக புகழ் பெற்றவர் இளம் நடிகை பிரியா வாரியர்.
அந்த பாடல் காட்சியில் இடம் பெற்ற பிரியா வாரியரின் கண் அசைவுகள், முக பாவனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பட ரிலீசை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.
இதனால் நாளுக்கு நாள் பிரியா வாரியரின் புகழ் உயர்ந்து கொண்டே செல்கிறது.
அதே சமயம் இந்த பாடல் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த பாடலில் இடம் பெற்றுள்ள ஒரு வரி மத உணர்வை புண்படுத்துவதாக உள்ளதாக ஐதராபாத் காவல்நிலையத்தில் அந்த படத்தின் இயக்குனர் உமர் லுலு மற்றும் நடிகை பிரியாவாரியர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி காவற்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த பாடலுக்கு மராட்டிய மாநிலத்திலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அங்குள்ள ஜின்சி காவல்நிலையத்தில் இது தொடர்பாக சிலர் முறைப்பாடு செய்துள்ளனர். அந்த முறைப்பாட்டில் ஒரு அடார் லவ் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் தங்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளதாகவும் எனவே அந்த படத்தின் இயக்குனர் உமர் லுலு மற்றும் பாடல் காட்சியில் நடித்த நடிகை பிரியா வாரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த முறைப்பாட்டில் கூறி உள்ளனர்.
இதுபற்றி அவர்கள் இருவர் மீதும் ஜின்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் , பிரியா வாரியருக்கு எதிராக தொடர்ந்து முறைப்பாடுகள் அளிக்கப்படுவதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.