பட்டம் விட சென்ற சிறுவனுக்கு காத்திருந்த பேராபத்து!! யாழில் சோகச் சம்பவம்

Tuesday, 20 February 2018 - 11:59

%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%21%21+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
யாழ்ப்பாணம் -சாவகச்சேரி பிரதேசத்தின் பாதுகாப்பற்ற பாழடைந்த கிணற்றில் வீழ்ந்து 15 வயது சிறுவனொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் 8 வயதுடைய மற்றுமொரு சிறுவனுடன் பட்டம் விடுவதற்காக சென்றிருந்த வேளையில் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சிறுவன் கிணற்றில் வீழ்ந்ததும் மற்றைய சிறுவன் வீட்டிற்கு விரைந்து சம்பவம் குறித்த பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பிரதேசவாசிகள் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த சிறுவனை கிணற்றில் இருந்து மீட்டு சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.