சுற்றுலா இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி செஞ்சுரியனில் இடம்பெறவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் வெற்றிப்பெற்றுள்ள இந்திய அணி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இதனிடையே, நியூசிலாந்தில் இடம்பெறும் முக்கோண இருபதுக்கு இருபது போட்டியில் இறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
அவுஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டி ஒக்லோண்ட் , ஈடன் பார் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இங்கிலாந்து, அவுஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்குகொண்ட இந்த முக்கோண தொடரில் புள்ளிகளின் அடிப்படையில் இறுதி போட்டிக்கு அவுஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.