யாழ்ப்பாணம் - பண்டாரவளை பேருந்து ஒன்றில் வெடிப்பு சம்பவம்..!!

Wednesday, 21 February 2018 - 8:40

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D..%21%21
தியத்தலாவ - கஹகொல்ல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்றில் இன்று காலை தீ பரவியதற்க்கு வெடிப்பு சம்பவமே காரணம் என அறியவந்துள்ளது.

குறித்த பேருந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்து தியத்தலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்து ஒன்றிலே குறித்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எவ்வாறான வெடிப்பு என்பது குறித்து இதுவரையில் அறியப்படவில்லை.