பல வீடுகளில் இரவு உணவு தொடர் நாடகம் பார்த்துக் கொண்டே தான் நடக்கும்.
அல்லது பலருக்கு தொடர் நாடகம் பார்த்த பிறகு தான் சாப்பாடே இறங்கும். இப்படி பல வருடங்களாக சின்னத்திரையை தொடர் நாடகங்கள் ஆதிக்கம் உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வு.
இந்த தொடர் நாடகங்கள் பல வருடங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிவருகின்றன.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தெய்வமகள் தொடர் நாடகம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்ற ஒன்று.
இந்த தொடர் நாடகம் விரைவில் முடிந்துவிடும் என்ற தகவல் வெளிவந்தது.
இந்த மெகா தொடரில் எதிர் நாயகியாக நடித்த ‘அண்ணியார்’ காயத்ரி, கதாநாயகன் பிரகாஷால் கொல்லப்படுவது போன்ற காட்சிகள் படமாக்கம் செய்யப்பட்டது.
இந் நிலையில், கடந்த 17 ஆம் திகதி தெய்வமகள் தொடர் நாடகம் நிறைவடைந்துள்ளமை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.