நைஜீரியாவில் ஆண்; ஒருவர் பெண் பாவையை திருமணம் புரிந்துக்கொண்டு உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி இவர் பெண் பாவையை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
திருமணத்திற்கு ஏற்றவாறு மேலைத்தேய கலாசாரத்திற்கமைய உடை அணிந்து வந்தார் மாப்பிள்ளை.
சிறிது நேரத்தில் குறித்த கலாசாரத்திற்கு ஏற்றவாறே வெள்ளை உடை அணிவிக்கப்பட்ட பெண் பாவை ஒன்றும் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்பின்னர் மணமகனுக்கு தோழன் வரவழைக்கப்பட்டுள்ளதோடு மணமகளான பெண் பாவைக்கு பாவை தோழியும் நிறுத்தப்பட்டு திருமணத்திற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுள்ளது.
சிறிது நேரத்தில் பெண் பாவைக்கு மணமகன் மோதிரம் அணிவித்து திருமணம் புரிந்தக்கொண்டுள்ளார்.
இந்த செயலை கண்டு அருகிலுள்ளவர்கள் ஆச்சரியத்தில் வியப்புடன் நோக்கியுள்ளனர்.
மணமகன் பாவையை திருமணம் செய்துக்கொண்டாலும், இவர்களின் திருமணத்தினை பதிவு செய்ய முடியாது என விவாகப்பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான திருமணங்களுக்கு பதிவுகள் அவசியமில்லை என தெரிவித்துள்ள விவாகப்பதிவாளர்கள், பாவையை மனிதராக மதித்து செயற்பட்டமையை அர்பணிப்பா அல்லது மோகமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த மணமகன் பெண் பாவையின் அழகே தன்னை கவர்ந்ததாகவும், வாழ்வுள்ளவரை தாம் இந்த பாவையுடனேயே வாழ்வேன் எனவும் அறிவித்துள்ளார்.