​பொதுமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி!

Thursday, 22 February 2018 - 19:02

%E2%80%8B%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%21
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியுடனான காலநிலை நாளை மறுதினத்துடன் ஓரளவு மாற்றமடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்த திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக் கூடும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, இரவு வேளைகளில் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் ரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.